டாஸ்மாக்கடைகள் மூடல்: பிற பகுதிகளில் உள்ள கடைகளில் குவியும் ‛‛குடிமகன்கள் ''

சென்னை: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ் மாக் கடைகள் மூடப்பட்டதால் பிற நகர் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிற பகுதிகளில் கூட்டம்

தமிழகத்தில் 5 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் தேசிய நெடுஞ்சாலை. மாநில நெடுஞ்சாலையில் சுமார் 3 ஆயிரத்து 400 கடைகள் செயல்பட்டு வந்தன. இதனை மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. கோர்ட் உத்தரவை அடுத்து கடைகள் மூடப்பட்டதால் பிறநகர் பகுதிகளில் குடிமகன்கள் மது வாங்க குவிந்தனர். இதனால்அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Comments