அப்போது அவர் கூறுகையில், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று, இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் மீட்பேன். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து அதன் மூலம் வெற்றி பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மக்களிடம் எங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஆர்.கே நகரில் வாக்குக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என மக்களிடமே கேட்டு பாருங்கள் உண்மை புரியும். தமிழகத்தில் அதிமுகவை ஒழித்து விட வேண்டும் என சிலர் செயல்படுகிறார்கள். ஆட்சியை கவிழ்க்க எங்கள் எம்.எல்.ஏக்களிடம் நண்பர்கள் மூலம் மு.க.ஸ்டாலின் பேரம் பேசி வருகிறார். ஆர்.கே.நகரிலேயே வீடு எடுத்து தங்கி, வாரத்தில் 5 நாள்கள் மக்களை சந்திப்பேன் என்றார் அவர்.
Comments