இலங்கை வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்தி: மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக இந்திய அரசு நடத்தும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவோம். தமிழக மீனவர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்படுவர். மீனவர் கொல்லப்பட்டது கவலை அளிக்கிறது. இவ்வாறு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் மீனவர் பிரிட்ஜோ பலியானார். இதன் காரணமாக இப்பகுதியில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை அரசு தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments