சசிகலா பெயரை சபையில் உச்சரிப்பதா ? ஸ்டாலின் எதிர்ப்பு

தினமலர் செய்தி : சென்னை: தமிழக பட்ஜெட் அறிக்கையை ஜெயலலிதா புகழ் பாடி துவக்கிய நிதியமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசி தொடர்ந்து சசிகலா மற்றும் தினகரன் பெயரை கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். கட்சியின் பொது செயலர் என்ற முறையில், சசிகலா பெயரை கூறியதாக ஜெயக்குமார் கூறினார். 

ஸ்டாலின் எழுந்து கோர்ட்டால் தண்டிக்கப்பட்ட ஒருவர் பெயரை சபையில் உச்சரிப்பது முறையல்ல. இதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். என்றார். இதற்கு பதில் அளித்த அவை முன்னவர் செங்கோட்டையன் பதில் அளிக்கையில், அவரவர் கட்சி தலைவர்கள் பெயரை உச்சரிப்பது மரபில்இருப்பதுதான் என்றார். இருப்பினும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து எதிர்ப்பு கோஷம் எழுப்பினர்.

Comments