அப்போது அவர்கள் கூறுகையில், ஓபிஎஸ் அணியின் சார்பில் 5706 பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரங்கள் அடிப்படையில் பார்த்தால், 43 லட்சம் அதிமுக உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். 95% அதிமுக உறுப்பினர்கள், நிர்வாகிகள் எங்களுக்கே ஆதரவு அளிக்கிறார்கள். எனவே, நாங்களே உண்மையான அதிமுக. அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த மூத்த நிர்வாகி மதுசூதனன்தான். அந்த மதுசூதனனே இரட்டை இலையை ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்குத்தான் பரிந்துரைத்துள்ளார். இரட்டை இலை எங்களுக்கே வழங்கப்பட வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
Comments