மின் வாரியத்துக்கு ரூ.500 கோடி கடன்

தமிழ்நாடு மின் வாரியம், புதிய திட்டங்களுக்கு, வங்கிகள், மத்திய அரசின், 'பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' நிறுவனங்களிடம் இருந்து, கடன் வாங்குகிறது. 

அதன்படி, ரூரல் எலக்ட்ரிபிகேஷன் சார்பில், வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையம், புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க, ஜன., மாதம், மின் வாரியத்துக்கு, 6,890 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.

தற்போது அந்நிறுவனம், மின் வாரியத்துக்கு, 500 கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளது. அந்த கடன், மின் கொள்முதல் மற்றும் மின் உபகரணங்கள் வாங்குவதற்காக செலவிடப்படும் என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Comments