தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2016 டிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கும்படியும்உத்தரவிட்டது.
எப்போது நடத்த போகிறீர்கள்?'
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு, உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, 'உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்?' என, நீதிபதிகள்கேள்வி எழுப்பியிருந்தனர். இவ்வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'எப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த போகிறீர்கள்?' என, நீதிபதிகள் கேட்டனர்.
மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''சில பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது; மே, 15ல் நடத்த உத்தேசிக்கிறோம்,'' என்றார்.
இதையடுத்து, உறுதியான தேர்தல் தேதியை தெரிவிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு, டிவிஷன் பெஞ்ச் தள்ளிவைத்தது.
Comments