மேலும், அண்ணா மருத்துவமனையில் இருந்த போது அரசு சார்பில் சிகிச்சை குறித்து அறிக்கை தரப்பட்டது என்றும், ஜெயலலிதா மறைவு என்ற தகவல் கூட குழப்பமான நிலையில் வெளியிடப்பட்டது என்று ஸ்டாலின் தெரிவித்தார். ஜெயலலிதா மறைந்த செய்தி வெளியாகும் முன்பே அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும், மரணத்திலும் மர்மம் உள்ளது. ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா மற்றும் அவரது குடும்பமே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.
Comments