கடந்த, 2015 நவம்பரில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கனமழை யால் ஏரிகள் நிரம்பின. செம்பரம் பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டதால், சென்னையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன;உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதி மன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்கள், தலைமை நீதிபதி, எஸ்.கே.கவுல் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்த போது, 'ஆறு ஆண்டுகள் முடிந்தும், பேரிடர் மேலாண்மை திட்டம், இன்னும் நகல் வடிவில் தான் உள்ளது; திட்டத்தை முன்கூட்டி வகுத்திருந் தால், வெள்ள சேதம் தவிர்க்க பட்டிருக்க லாம்' என, உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வருவாய் நிர்வாக முதன்மை செயலர் சத்யகோபால் தலைமையில், 20 பேர் அடங்கிய பேரிடர் மேலாண்மை ஆலோச னைக் குழு அமைத்ததற்கான அரசாணை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாக, முறை யான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய, அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டியிருப்பதாக, அட்வகேட் ஜெனரல் கூறி யுள்ளார். பேரிடர் மேலாண்மை திட்டத்தையும், ஆலோசனைக் குழு நியமனம் தொடர்பான அரசாணையையும், தாக்கல் செய்துள்ளார்.ஒரு வாரத்திற்குள், ஆலோசனை கூட்டம் நடப்பதாக வும் கூறியுள்ளார்.
பேரிடர் மேலாண்மை திட்டம் குறித்து ஆய்வு செய்ய, மனுதாரர் மற்றும் அட்வகேட் ஜெனரல் தரப்பில், அவகாசம் கோரப்பட்டது. மனுதாரர் கள் தரப்பில் குறிப்பிட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, உடனடியாக தேவையான நடவடிக் கையை, அரசு எடுக்க வேண்டும். விசாரணை, நவ., 15க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
Comments