திமுக தரப்பில் போட்டியிட விரும்புவோர் தங்களின் மனுக்களை அளிக்கலாம் என திமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில் இன்று அறிவாலயத்தில் திமுகவினர் பலர் வந்திருந்தனர். அறிவாலய மானேஜர் பத்மநாபன், தலைமை நிலைய செயலர் பூச்சி முருகன் , ஜெயக்குமார் ஆகியோர் மனுக்களை பெற்று கொண்டனர்.
3 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்தவர்கள் விவரம் வருமாறு:
01. அரவக்குறிச்சி - பழனிச்சாமி .
02. தஞ்சாவூர் - ஜெயப்பிரகாஷ் தேமுதிகவில் இருந்து சமீபத்தில் திமுகவுக்கு வந்தவர். திமுக இளைஞரணி அமைப்பாளர் சன் ராமநாதன்,
03. திருப்பரங்குன்றம் - மாநில திமுக., மருத்துவ அணி துணை தலைவர் டாக்டர் சரவணன். கவுன்சிலர் ரோஸ் முத்தையா, ஒன்றிய செயலர் ஈஸ்வரன்.
கருணாநிதி நாளை நேர்காணல்:
திமுக., வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சியின் தலைவர் கருணாநிதி நாளை நேர்காணல் நடத்துகிறார். நாளையே வேட்பாளர்கள் பெயர் விவரம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments