'வெள்ள நிவாரணப் பணிகளை தமிழக அரசு எப்படி கையாண்டது' என்பது குறித்த கேள்விக்கு படுமோசம்- 34%; மோசம்-30% என மொத்தம் 64% பேர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். பரவாயில்லை என 28% பேரும் சிறப்பாக இருந்தது என 8% பேர் மட்டும் கருத்து கூறியுள்ளனர்.
ஜெயலலிதா அறிவித்துள்ள நிவாரணத் தொகை?குறித்த கேள்விக்கு போதாது என 57%; எதிர்பார்த்த அளவு இல்லை என 28%; போதுமானது என 15% பேரும் தெரிவித்துள்ளனர்.
அரசின் செயல்பாடு, கட்சிகள் செயல்பாடு, தன்னார்வலர்கள் செயல்பாடு எது சிறப்பாக இருந்தது என்ற கேள்விக்கு தன்னார்வலர்கள் என 65% பேரும் அரசியல் கட்சிகள் என 18% பேரும் தெரிவித்துள்ளனர். 3வதாகத்தான் அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது என 17% பேர் மட்டும் தெரிவித்திருக்கின்றனர்.
வெள்ள நிவாரணத்தின் அடிப்படையில் தேர்தலில் வாக்களிப்பீர்களா? என்பதற்கு ஆம் என 44% பேர் தெரிவித்துள்ளனர். இல்லை என 32% பேரும் கருத்து இல்லை என 24% பேரும் கூறியுள்ளனர்.
வெள்ள நிவாரணப் பணிகளை தமிழக அரசு எப்படி கையாண்டது என்ற கேள்விக்கு மோசம் என 32%; பரவாயில்லை என 28% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். படுமோசம் என 23%; சிறப்பாக என 17% பேரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
Comments