அருண் ஜெட்லி தப்பு செய்யல: விசாரணை குழு அறிக்கை

தினமலர் செய்தி : புதுடில்லி : டி.டி.சி.ஏ., எனப்படும், டில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்திய, நிபுணர் குழு அறிக்கையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் இடம் பெறவில்லை. சமீபத்தில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் முதன்மைச் செயலர் ராஜேந்தர் குமார் அலுவலகத்தில், சி.பி.ஐ., அதிரடி சோதனை நடத்தியது. அப்போது, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 1999 முதல், 2013 வரை, டி.டி.சி.ஏ., தலைவராக இருந்த போது, நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பான கோப்புகளை எடுக்கவே, சி.பி.ஐ., சோதனை நடத்தியதாக, முதல்வர் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, டி.டி.சி.ஏ., முறைகேடுகள் பற்றி விசாரிக்க, டில்லி கண்காணிப்புத் துறை முதன்மைச் செயலர் சேத்தன்சாங்கி தலைமையில், மூன்று பேர் குழுவை, டில்லி அரசு நியமித்தது. இக்குழு, விசாரணை முடிவில், 237 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.அந்த அறிக்கையில், எந்த இடத்திலும், அருண் ஜெட்லியின் பெயர்இடம்பெறவில்லை. இருப்பினும், டி.டி.சி.ஏ.,வில், பெரியளவில் முறைகேடுகள் நடந்துள்ளதை கருத்தில் கொண்டு, அதை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டுமென, பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

மப்ளர் தான் கிடைக்கும்':

''என் வீட்டில், சி.பி.ஐ., சோதனை நடத்தினால், கணக்கில் வராத, நான்கு மப்ளர்கள் தான் கிடைக்கும்,'' என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். 

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கூறியதாவது:சமீபத்தில், என் அலுவலகத்தில், மோடி அரசின்உத்தரவுப்படி, சி.பி.ஐ., சோதனை நடத்தியது. என் வீட்டில், சி.பி.ஐ., சோதனை நடத்தினால், கணக்கில் வராத, நான்கு மப்ளர்கள் மட்டுமே, அவர்களுக்கு கிடைக்கும். ஆட்டோக்களுக்கு, 'பெர்மிட்' வழங்குவதில்நடந்த முறைகேடு தொடர்பாக, போக்குவரத்து துறையை சேர்ந்த மூன்று அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். இவ்வழக்குகளை, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைப்போம். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

Comments