வடபழனி, கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், சூளைமேடு ,நந்தனம், தியாகராயநகர், கிண்டி. சைதாப்பேட்டை, பாரிமுனை, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. அதேபோல் புறநகர் பகுதிகளான, தாம்பரம், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கி நின்றது. தொடர்ந்து பெய்த மழைக்கு தண்ணீர் செல்ல முடியாமல் பள்ளமான பகுதிகளில் தேங்கி நின்றது. இதையடுத்து இந்த மழைநீர் கருணாநிதியின் வீட்டின் உள்ளே புகுந்தது.
Comments