இதில் என்ன விஞ்ஞானம் இருக்கிறது. நான் நினைக்கிறேன், ரமணன் தினமும் வீட்டுக்கு வெளியே போய் வானத்தை பார்த்து விட்டு ஓகே, 'இன்றைக்கு மழை பெய்யும், இன்றைக்கு வெயில் அடிக்கும்' என கணிக்கிறார். அத்தகைய தொழில் நுட்பத்தைதான் இங்கே வைத்திருக்கிறோம்.
இங்கு சாட்டிலைட் கிடையாது, ஒண்ணும் கிடையாது. வெளிநாட்டில் இருக்கிற தொழில் நுட்பங்களை இங்கு கொண்டு வர வேண்டும். விஞ்ஞானம் எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறது.
பருவமழை எப்போது வரும், எந்த சீசனில் வரும், எங்கிருந்து வரும், எப்படி வரும் இதையெல்லாம் சுலபமாக மற்ற நாடுகளில் சொல்வதை பார்த்து விட்டு வருகிறோம். அந்த தொழில் நுட்ப முன்னேற்றங்களை இங்கே கொண்டு வரணும். ஆனால் இந்த அரசாங்கம் இருக்கும் வரைக்கும் அது வர வாய்ப்பே இல்லை என்றார் அன்புமணி.
அன்புமணியின் கிண்டல் ரமணன் ரசிகர்களை ஆத்திரமடையச் செய்யப்போகிறது. ரமணன் புண்ணியத்தில் பத்து நாட்களுக்கும் மேலாக விடுமுறையை அனுபவிக்கும் மாணவர்கள் அன்புமணியிடம் சண்டைக்கு போகாமல் இருந்தால் சரிதான்.
Comments