'முதல்வரிடம் கேளுங்கள்'

தினமலர் செய்தி : திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், திருநின்றவூரில் பாதிக்கப் பட்டவர்களுக்கு, நிவாரணம் வழங்கினார். தண்ணீர்குளம், ராமாபுரம் பகுதிகளில், வெள்ளச் சேதங்களை பார்வையிட்டார்.

அப்போது சிலர் அவரிடம், 'நீங்கள் மாவட்டம் முழுவதும் செல்லாமல், குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே செல்கிறீர்களே' என, கேட்டனர்.அதற்கு விஜயகாந்த், 'இந்த கேள்வி எல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது; முதல்வரிடம் கேளுங்கள்' என கிண்டலாக பதிலளித்தார்.

தண்ணீர்குளத்தில் 100 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறி, சேலை வழங்கினார். ஒரு குழந்தைக்கு விஜயராஜ் என பெயர் சூட்டி, 100 ரூபாய் அன்பளிப்பு வழங்கினார்.

Comments