ஒரு கிலோ மீட்டர் தொலைவைக் கடக்கவே பல மணிநேரம் என்ற நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு, போக்குவரத்து நெரிசலைத் தடுக்க சென்னை போலீசார் தவறிவிட்டதாக தலைமை நீதிபதி கவுலிடம் முறையிட்டார். அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி கவுல், போக்குவரத்து நெரிசலில் நேற்று மாலை நானும் சிக்கிக் கொண்டேன். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாம் இயற்கை வளங்களை அழித்தால் இயற்கை நம்மை அழிக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
Comments