தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. வீடுகள், சாலைகள், பாலங்கள் சேதமுற்றுள்ளது . மின் இணைப்பு வழிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்பு பணிக்கென ரூ .8 ஆயிரத்து 481 கோடி தேவைப்படுகிறது. இன்னும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சேதம் மதிப்பு முழு அளவில் மதிப்பிட முடியவில்லை.
உள் கட்டமைப்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டியுள்ளது. இதனால் இடைக்கால ஏற்பாடாக மத்திய அரசின் பேரிடர் நிதியில் இருந்த ரூ.2 ஆயிரம் கோடியை நிதியாக வழங்க வேண்டும் . மேலும் வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை விரைந்து அனுப்பிட வேண்டும் இவ்வாறு ஜெ., கூறியுள்ளார்.
இதையடுத்து ரூ.940 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
Comments