தமிழகத்தில், ஆன்மிகத்தையும், சினிமாவையும், அரசியலையும் என்றைக்கும் பிரித்துப் பார்க்க முடியாது; இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று, பின்னிப் பிணைந்தவை.அதனால் தான், சன்னிதானமாக இருக்கும் நான், அரசியல் பேச வேண்டியதாகிறது; சினிமாவைப் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது.
சமூகத்தின் பால் இணைந்து கிடக்கும், இந்தத் துறைகளில் இருக்கும் முக்கியஸ்தர்கள் அனைவரும், என் பால் ஈடுபாடு கொண்டவர்கள். அந்த வகையில், சினிமா துறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள், என் ஆசி பெற்றவர்களே.குறிப்பாக, நடிகர்கள் சிவகுமார், விஷால், நாசர், சரத்குமார், ராதாரவி உட்பட, அத்தனை பேரும் என் மீது அன்பு கொண்டவர்கள்; நான் சொன்னால், அவர்கள் எதையும் மீற மாட்டார்கள்.
'நடிகர் சங்கத்திற்குள் குழப்பம் விளைவிக்க, சிலர் முயல்வதை தடுக்க வேண்டும்' என, சரத்குமாரும், ராதாரவியும், என்னை சந்தித்துக் கேட்டுக் கொண்டனர். நடிகர் சங்க கட்டட பிரச்னையில், நடிகர்கள் விஷால், சிவகுமார், நாசருக்கு இருக்கும் அதிருப்தியை, ஒரு நிமிடத்தில் தீர்த்து விடலாம்.
நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக, எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டால், அவர்கள் சமாதானமாகி விடுவர். அதை செய்ய, சரத்குமாரும், ராதாரவியும் தயாராக உள்ளனர்.நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்படக் கூடாது என்பது தான், எல்லாருடைய எண்ணமும். தேர்தல் நடக்காமல், ஒருமித்த எண்ணம் அடிப்படையில், சரத்குமார் மீண்டும், நடிகர் சங்கத்துக்கு தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும்.இதற்காக, எதிர் தரப்பிடம் பேசி, சமாதானம் ஏற்படுத்தும் முயற்சியில் நான் இறங்கி இருக்கிறேன்; நல்லபடியாகவே, முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
Comments