பிரதமர் ரணில் மீது அதிருப்தி இலங்கையில் 4 மந்திரிகள் ராஜினாமா

தினமலர் செய்தி : கொழும்பு: இலங்கையில் பிரதமர் ரணில் மீது அதிருப்தியடைந்த 4 மந்திரிகள் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.இலங்கையில் இலங்கை சுதந்திரா கட்சி ஆட்சி நடக்கிறது. மைத்ரிபால சிறிசேன அதிபராக உள்ளார். இவரது அமைச்சரவையில் , மகிந்தா யாப அபேவர்த்தனே, தில்லான் பெரேரா, சி.பி. ரத்னநாயகே, பவித்ரதேவி வன்னியரச்சி ஆகியோர் ராஜினாமா செய்வதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினர்.
ராஜினாமா குறித்து அவர்கள் கூட்டாக அளித்த பேட்டியில், பிரதமராக உள்ள ரணில் விக்ரமசிஙகே கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் தனக்கு கீழ் வைத்து அதிபர் சிறிசேனவை டம்மியாக்க முயற்சிக்கிறார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.இவ்வாறு அவர்கள் பேட்டியளித்தனர்.

Comments