திவா பகுதியில் ரயில் இயக்கத்துக்குத் தேவையான மின்சாரம் கடத்தும் பேண்டோகிராப் லைனில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 3 முக்கிய வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பீக் அவரில், அலுவலகத்திற்கு செல்ல வந்தவர்கள் எரிச்சல், கோபமுற்றனர்.
ரயில் நிலையங்களில் கூடிய பயணிகளுக்கும், காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஜீப் மற்றும் அரசு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி விசாரிக்க மாநில அமைசர்களை முதல்வர் பட்னாவிஸ் அனுப்பி வைத்துள்ளார்.
Comments