இந்த பேச்சுக்கு எதிர்கட்சிகள் பார்லி.,யில் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது. அவையின் பணிகள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் சாத்வி, பேசுகையில், நான் யாரையும் புண்படுத்தும் விதமாக பேசவில்லை. யாரையும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என்று பதில் அளித்தார்.
ஆனால் எதிர்கட்சியினர், மன்னிப்பு மட்டும் போதாது. அமைச்சர் பேச்சு ஒரு குற்றச்செயல். மத துஷ்வேத கருத்தை கூறியுள்ளார். அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்தனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. நிதி அமைச்சர் அருண்ஜெட்லி சொன்ன சமாதானத்தையும் எதிர்கட்சியினர் ஏற்று கொள்ள மறுத்து விட்டனர். அமைச்சர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும் என மார்க்., கம்யூ தரப்பில் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தினார்.
பிரதமர் அறிவுரை: பேச்சை நிறுத்தி விட்டு வேலையை பாருங்கள் .பா.ஜ., எம்.பி.,க்கள் பேசும் போது கவனமாக பேச வேண்டும் என்றும், பொதுவான விஷயங்களில் கருத்துக்களை கூறக்கூடாது என்றும், கூறி உள்ளார். இதன் மூலம், சத்வியின் பேச்சை பிரதமர் மோடி மறைமுகமாக கண்டித்துள்ளார்.
Comments