ஓட்டலை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பயங்கரவாதிகள் போலீசாருடன் பேசியுள்ளனர். இதில் ஓட்டலை சுற்றிலும் 4 குண்டுகள் வைத்துள்ளேன். ஓட்டலுக்குள் இரண்டு குண்டுகள் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்க செய்ய முடியும் என எச்சரித்துள்ளான். மேலும் ஆஸி., பிரதமர் டோனி அப்போட்டை எங்களிடம் பேச சொல்லுங்கள் என்றும் கட்டளையிட்டுள்ளான்.
பயங்கரவாதிகள் பிடியில் இருந்து 5 பேர் தப்பி ஓடி வந்துள்ளனர். இவர்களும் பயங்கரவாதிகள் குண்டு வைத்திருப்பதை ஒத்து கொண்டனர். பயங்கரவாதிகள் கறுப்பு உடை அணிந்திருப்பதாகவும், வெள்ளை பண்டானா அணிந்துள்ளனர் என்றும், இவர்கள் 40 முதல் 50 வயது வரை இருக்கலாம் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.
இந்திய தூதரகம் மூடல் : சிட்னி சம்பவம் தொடர்பாக ஆஸி.,யில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கான ஹெல்ப்லைன் எண்: 0061-481453550 அறிவிக்கப்பட்டுள்ளது. பிணைக்கைதிகளை மீட்கும் பணியில் தேசிய பாதுககப்பு படை போலீசாருரும் இணைந்துள்ளனர்.
Comments