இந்த ஆண்டு காணிக்கையாக ரூபாய் 16.48 கோடி, அரவணை விற்பனையில் ரூபாய்
18.17 கோடி, அப்பம் விற்பனையில் ரூபாய் 3.84 கோடி, அபிஷேகம் மூலமாக ரூபாய்
49 லட்சம் கிடைத்துள்ளது.
இதனை நிருபர்களிடம் தெரிவித்த போர்டு உறுப்பினர் சுபாஷ் வாசு பக்தர்கள்
கூட்டம் அதிகரிப்பதை பொறுத்து அவர்களுக்கான வசதிகளும் விரிவுபடுத்தப்படும்
என்றார்.
அவர் மேலும், சபரிமலை மற்றும் பம்பையில் நடைபெறும் அன்னதானம், பந்தளம்
மற்றும் எருமேலிக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. பந்தளத்தில் காலை
7.30க்கு உப்புமா மதியம் 12 க்கு சாப்பாடு இரவு 7.30 க்கு கஞ்சி
வழங்கப்படும்.
எருமேலியில் காலை 11 மணி முதல் மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் சேர்த்த
கஞ்சி வழங்கப்படும். மலையேறும் பக்தர்களுக்கு உடல் உற்சாகத்தை ஏற்படுத்த
இது உதவும். மாலை 6.30 முதல் கஞ்சி பயறு ஊறுகாய் வழங்கப்படும் என்று அவர்
தெரிவித்தார்.
Comments