இந்நிலையில், சென்னையில் பால் முகவர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.
பொன்னுசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில்.
தனியார் பால் விலையை லிட்டருக்கு ரூ.6 முதல் 8 வரை உயர்த்த அனைத்து
நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. அதேபோல பால் கொள்முதல் விலையையும்
உயர்த்தி, விவசாயிகளை ஈர்க்க தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன.
இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இந்த
விவகாரத்தில் மாநில அரசு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்
என்றார்.
தமிழகத்தில் திருமலா, ஹெரிடேஜ், தொட்லா, ஜெர்சி ஆகிய நிறுவனங்கள் தனியார்
பால் விற்பனையில் முன்னணியில் உள்ளன. கடந்த மாதம்தான் இந்த நான்கு
நிறுவனங்களும் லிட்டருக்கு ரூ.2 விலையை உயர்த்தியிருந்தன. இந்த ஆண்டில்
இதுவரை தனியார் பால் நிறுவனங்கள் 3 முறை விலையை உயர்த்தியுள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது.
Comments