இது குறித்து நீதிபதி சைனி கூறுகையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று
இறுதி வாதம் தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில், கனிமொழியும்
நீதிமன்றத்துக்கு வரவில்லை அவரது வழக்கறிஞரும் வரவில்லை.
நேரம், 11.30 மணி ஆகிவிட்டது. கனிமொழி ஆஜராகாததையடுத்து அவருக்கு இந்த
நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கிறது என்றார்.
பின்னர் 12.25 மணிக்கு கனிமொழியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி
நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார். இதனையடுத்து கனிமொழிக்கு
பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவு 1 மணி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
மேலும், கனிமொழியின் வழக்கறிஞரை நீதிபதி சைனி கடுமையாக எச்சரித்தார்.
எதிர்காலத்தில் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தினார்.
முன்னதாக இன்று காலை, ஆவணங்களைப் படித்து பார்க்க அரசுத் தரப்பு வழக்கறிஞர்
அவகாசம் கேட்டதையடுத் ஸ்பெக்ட்ரம் வழக்கின் இறுதி வாதத்தை டிசம்பர் 19-ந்
தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Comments