மறைந்த தொழிலதிபர், பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சக்தி குழும நிறுவனங்களின் தலைவர். அவருக்கு, 2007ல் பத்ம பூஷண் விருது வழங்கி, மத்திய அரசு கவுரவித்தது. காந்தியத்தை வாழ்வின் லட்சியமாக கொண்டிருந்தார் மகாலிங்கம். தவிர, வள்ளலார் மார்க்கமான சுத்த சமரச சன்மார்க்கத்துக்காக எண்ணற்ற பணிகளைச் செய்துள்ளார்.
கடந்த 1923ல், பொள்ளாச்சியில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த மகாலிங்கம், 1952
- 67 வரை, காங்., எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இவருக்கு பாரதியார் பல்கலை,
அண்ணா பல்கலை, சென்னை பல்கலை உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம்
வழங்கி கவுரவித்துள்ளன.தொழிலதிபர் மகாலிங்கம், எம்,எல்.ஏ.,வாக இருந்தபோது
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை பொள்ளாச்சிக்கு
பெற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments