சுப்ரமணிய சாமியுடன் மீனவர்கள் சந்திப்பு

சென்னை: பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமியை , தமிழக மீனவர்கள் இன்று சந்தித்து பேசினர். அப்போது இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத்தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்புக்குப்பின் நிருபர்களிடம் பேசிய சுப்ரமணியசாமி, மீனவர்களின் படகுகளை விடுவிக்கக்கோரி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை வலியுறுத்தப்போவதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, கட்சியின் தேசிய தலைவர் எச். ராஜா, மாநில தலைவர் தமிழிசை சவுந்ததராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Comments