வாரிசு அரசியலை ஒதுக்க வேண்டும்:பிரதமர் மோடி வலியுறுத்தல்

சிர்ஸா: அரியானா மாநிலத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில், குடும்ப அரசியலை ஒதுக்கித் தள்ள வேண்டும் பொதுமக்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அரியானாவில் வரும் 15ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அங்குள்ள சிர்ஸா நகரில் நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியாதாவது:


கூட்டணிகளிடம் ஓர் ஒப்பந்தம்:

ஒரு குடும்பம் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்த வேண்டும்; அப்போது மற்றொரு குடும்பம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து விமர்சிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டணிகளிடையே ஓர் ஒப்பந்தம் இருக்கிறது.மாநிலத்தில் அமைந்துள்ள கூட்டணிகளைப் பாருங்கள். அவை உலக மல்யுத்த வீரர்கள் போல் மக்கள் முன் மோதிக் கொள்கின்றன.இந்த வாரிசு அரசியலையும், அராஜகத்தையும் ஒதுக்கித் தள்ளி, நீங்கள் தான் அரியானாவை காப்பாற்ற வேண்டும்.

தீவு போல் உள்ள சிர்ஸா :

அரியானாவின் சிர்ஸா பகுதி ஒரு தீவைப் போல் உள்ளது. இது மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நகருக்கு ஒருங்கிணைந்த வளர்ச்சியும், ரயில்வே, சாலை, இணையதளம் ஆகிய தொடர்புகளும் அவசியம்.மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தப் பகுதியின் வளர்சிச்சிக்கு சிறப்பு மாதிரித் திட்டத்தைக் கொண்டுவரும்.

ராணுவத்தினருக்கு ஒரேபதவி-ஒரே ஓய்வூதியம்:

ராணுவத்தினருக்கு ஒரே பதவி-ஒரே ஓய்வூதியம் என்ற வாக்குறுதியை நாங்கள் பிரசாரத்தின்போது முன்வைத்தோம். அதை மத்திய அரசு வெற்றிகரமாக அமல்படுத்தி வருகிறது.மாநிலத்தில் அடுத்து அமையப் போவது பா.ஜ.க., அரசுதான் என்பது நிச்சயம்.ஆனால், பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மையுடன் கூடிய அரசு அமையுமா என்பதை முடிவு செய்யப் போவது நீங்கள்தான். அரியானா முன்னேற்றம் பெற பா.ஜ.க.,வுக்கு ஓட்டு போடுவதை தவிர வேறு வழியில்லை என்றார் மோடி.கருத்துக் கணிப்புகள் மூலம் சாதகமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அரியானாவில் பா.ஜ.க., தனிப்பெரும் கட்சியாக வரும் என்றோ பெரும்பான்மை பலம் பெறும் என்றோ அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

Comments