ஆந்திர புயல் மழைக்கு 2 பேர் பலி; ஹூட் ஹூட் புயல் கரை கடந்தது

ஸ்ரீகாகுளம்: கடந்த 4 நாட்களாக மிரட்டி வந்த ஹூட் ஹூட் என்ற அதிதீவிர புயல் இன்று விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. அப்போது கடல் அலைகள் பெரும் சீற்றத்துடன் பொங்கி எழுந்தன.

மணிக்கு 180 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. ஆந்திரமாநிலத்தில்
விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், கோதாவரி, விஜயநகரம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் மழைப்பொழிவு இருந்தது. அதிவேக காற்றினால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. 2 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. இன்னும் முழுச்சேதம் குறித்த தகவல் கிடைக்கப் பெறவில்லை.

புயல் எச்சரிக்கை காரணமாக கடலோர மாவட்ட மக்கள் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் பெரும் உயிர்ச்சதேசம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

சட்டீஸ்கரில் மழை; வானிலை மையம் ; புயல் குறித்து வானிலை ஆராய்ச்சி மைய டி. ஜி. ரத்தோர் நிருபர்களிடம் கூறுகையில், விசாகபட்டினத்தில் பலத்த மழை பெய்துள்ளது. கலகந்தி, மால்கங்கிரி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த புயல் காரணமாக தெலுங்கானா, ஜாண்கண்ட், சட்டீஸ்கர், மேற்குவங்கம், உ.பி., பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஒடிசாவில் 60 முதல் 70 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். 

Comments