ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு.. பெங்களூரிலிருந்து லேட்டஸ்ட் தகவல்கள் (Live*)

-அடுத்த முதல்வர் யார்.. எம்எல்ஏக்கள் கூடி முடிவு செய்வர் 
-தொண்டர்கள் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என ஜெயலலிதா தெரிவித்ததாக ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு!
-சிறையில் அடைக்கும் முன்பு ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை -பரப்பன அக்ரஹாரா பகுதியில் இருந்து கண்ணீருடன் அதிமுகவினர் வெளியேறுகின்றனர் 
-ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை, ரூ. 100 கோடி அபராதம்- ஜாமீன் இல்லை- உடனே சிறைக்கு செல்ல வேண்டும் 
-அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டிய முடியாது! -ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனது!!
- எம்எல்ஏ பதவியும் பறிக்கப்படும்
-4 வருட சிறை என்பதால் ஜெயலலிதாவுக்கு உடனடியாக ஜாமீன் இல்லை -ஜெயா, சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனே சிறைக்கு சென்றே ஆக வேண்டும் 
-ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதம் 
 -சசிகலாவுக்கும் ரூ. 10 கோடி அபராதம் 
-இளவரசி, சுதாகரனுக்கும் தலா ரூ. 10 கோடி அபராதம் 
-மொத்தத்தில் 4 பேருக்கும் சேர்த்து ரூ. 130 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பு 
-10 வருடங்களுக்கு எந்தத் தேர்தலிலும் ஜெயலலிதா போட்டியிட முடியாது! -ஜெயலலிதாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க அரசு வழக்கறிஞர் கோரிக்கை 
 -ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை! 
-பெங்களூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து 5 கிமீ தூரத்திற்கு 144 தடை உத்தரவு -ரகளையில் ஈடுபட்ட 100 அதிமுகவினர் கர்நாடக போலீசாரால் கைது -சென்னையில் இருந்து இன்றிரவு ஆம்னி பேருந்துகள் இயங்காது -சென்னையில் ஜெ.வின் போயஸ் தோட்டம் வீடு முன்பு அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி! 
-ஜெ. தீர்ப்பு எதிரொலி... சென்னையில் மாநகர பேருந்துகள் நிறுத்தம் -பல இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடல் 
-நெல்லை, நாகர்கோவிலில் ரயிலை மறித்து அதிமுகவினர் போராட்டம் -தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை, இரவுக் காட்சிகள் ரத்து 
-தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு -அதிமுகவினர் வன்முறை எதிரொலி
- தமிழகத்துக்கான பஸ்களை கேரளாவும் ரத்து செய்தது 
-ஜெயலலிதா, சசி, இளவரசி, சுதாகரனுக்கான தண்டனை விவரம் சிறிது நேரத்தில் அறிவிப்பு 
-சோகத்தில் அதிமுகவினர்

Comments