வாஷிங்டன்: ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொடூர செயல் கவலையளிப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.
வேரோடு அழிப்போம் : ஐ.நா. பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. கூட்டத்தினை துவக்கி வைத்து அதிபர் ஒபாமா பேசினார்.
வேரோடு அழிப்போம் : ஐ.நா. பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. கூட்டத்தினை துவக்கி வைத்து அதிபர் ஒபாமா பேசினார்.
அவர் பேசியதாவது,
ரஷ்யாவை எச்சரித்த ஒபாமா: போரை எதிர்கொள்வதா? அல்லது அமைதியை நிலைநாட்டுவதா என்ற நிலையில் தற்போது உள்ளோம். இதே போன்று தான் உக்ரை உள்நாட்டு போரையும் முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறோம். சிறிய நாடுகளை (உக்ரைன் ) பெரிய நாடுகள் (ரஷ்யா ) ஆக்கிரமிக்க நினைப்பதும், அழிக்க நினைப்பதும் சரியல்ல. அதை அனுமதிக்கவும் மாட்டோம். உக்ரைன் மக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.ஆசிய-பசிபிக் அமைப்பிலும் உள்ள நாடுகளில் அமைதிக்கு உறுதியளிப்போம். ஆசிய பசிபிக் பகுதியில் அமைதி வாய்ந்த சக்தி மிக்க நாடாக அமெரிக்கா தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
Comments