சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலை சந்திக்கவுள்ள பா.ஜ.,
வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாக, அக்கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் உள்ளாட்சி
இடைத்தேர்தலை சந்திக்கவுள்ள இடங்களில் அசாதாரண சூழல் நிலவுகிறது. அங்கு
பா.ஜ., வேட்பாளர்கள் மிரட்டப்படுகின்றனர், தேர்தலை நியாயமாக நடத்தும்படி
ஐகோர்ட் உத்தரவிடும் சூழ்நிலை உள்ளது என தெரிவித்தார்.
Comments