புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது குறித்து
பரிந்துரைகள் அளிக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒரு வல்லுநர் குழுவை
அமைத்திருந்தது. இந்த குழு தனது பரிந்துரைகளை சுகாதாரத் துறை
அமைச்சகத்திடம் அளித்துள்ளது.
இந்த வல்லுநர் குழு அளித்திருக்கும் பரிந்துரைகளில் சில:
25 வயதினருக்கு குறைவானவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்யக் கூடாது
பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு ரூ200 முதல் ரூ20ஆயிரம் வரை
அபராதம்
சிகரெட்டை சில்லறை விற்பனைக்கு தடை விதிப்பது.
ஒட்டுமொத்த சிகரெட் விற்பனையில் சில்லறை மூலமாக மட்டும் 70%
விற்பனையாகிறது. தற்போது சில்லறை விற்பனையை தடை செய்தால் பெருமளவு புகை
பிடிக்கும் பழக்கம் முடிவுக்கு வரும்.
சிகரெட் பாக்கெட்டுகளில் 80% அளவுக்கு எச்சரிக்கை விளம்பரம் அச்சிடப்பட
வேண்டும்.
சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை விளம்பரம் செய்யாத நிறுவனங்களுக்கு
ரூ 5ஆயிரம் முதல் ரூ50 ஆயிரம் வரை அபராதம்.
எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும்.
Comments