25 ஆண்டு காலம் கூட்டணி உறவு வைத்துள்ள இந்த இரு கட்சிகளும் இணைந்து வரும் சட்டசபை தேர்தலில் ( அக்டோபர் 15ம் தேதி ) ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற குறிக்கோளில் உள்ளன.
இந்நிலையில் இன்று மும்பையில் சிவசேனா உயர்நிலை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்ரே மராட்டிய மக்களுக்கு சேவை செய்ய எங்கள் அணியே முதல்வர் பதவியில் அமர வேண்டும். நாங்கள் 151 தொகுதிகளிலும் 119 தொகுதிகள் பா.ஜ.,வுக்கு வழங்க முடியும். கூட்டணி பிரியாமல் இருப்பதற்கு பா.ஜ.,வுக்கு கடைசி வாய்ப்பு வழங்குகிறோம். என்று கூறினார்.
கூட்டணி தொடரவே பா.ஜ., விருப்பம் ; சிவசேனாவுடனாகூட்டணி தொடரவே பா.ஜ., விருப்பம் உள்ளதாக மாநில நிர்வாகிகள் கூறியுள்ளனர். சிவசேனா கட்சியினர் சீட் பங்கீடு தொடர்பாக டி.வி., உள்ளிட்ட மீடியாக்கள் மூலம் தெரிவிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். நிர்வாக மட்ட அளவில் பேசி முடிக்க வேண்டும் என்று கூறினர்.
காங்., தேசியவாத காங்., தொகுதி பங்கீடு ; மகாராஷ்ட்டிர தேர்தலில் காங்., தேசியவாத காங்., கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் பங்கீடு குறித்து இறுதிகட்ட பேச்சு இன்று நடக்கிறது. இதில் உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 144 தொகுதிகள் தர வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கோரியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 125 தொகுதிகள் தருவதாக கூறியுள்ளது.
Comments