இந்தியாவில் லிட்டில் சிங்கப்பூர் திட்டத்திற்கு உதவி: சுஷ்மா சுவராஜ் தகவல்

சிங்கப்பூர்:இந்தியாவில் ரூ.7,060 கோடி மதிப்பீட்டில் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கும் லிட்டில் சிங்கப்பூர் திட்டத்திற்கு சிங்கப்பூர் அரசு உதவி செய்கிறது என மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.அவர் ஒரு நாள் பயணமாக சிங்கப்பூர் சிங்கப்பூர் சென்றிருந்தார். இரு நாடுகளுக்கும் தூதரக அமைப்பிலான உறவு உதயமாகி 50 ஆண்டு ஆவதை முன்னிட்டு சுஷ்மா சுவராஜ் அங்கு சென்றார்.
சிங்கப்பூர் சென்ற அவர் அந்த நாட்டின் பிரதமர் லீ ஹெசியன் லூங், வெளியுறவு அமைச்சர் சண்முகம், முன்னாள் பிரதமர் கோ சோக் டாங் ஆகியோரை சந்தித்து பேசினார்.


100 'ஸ்மார்ட் சிட்டிகள்' :

அப்போது ,இந்தியாவில் ரூ.7,060 கோடி மதிப்பீட்டில் 'ஸ்மார்ட் சிட்டிகள்' என்ற பெயரில் 100 நவீன நகரங்களை உருவாக்கும் திட்டம் பற்றி சுஷ்மா சுவராஜ் விளக்கி கூறினார்.பின்னர், நீர் மேலாண்மை, நகர்ப்புற புத்துயிரூட்டல் ஆகியவற்றில் இந்தியாவுக்கு சிங்கப்பூர் உதவுவதாக தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து நடந்த 50 பொன்விழாவை துவக்கி வைத்து பேசும்போது இரு நாடுகள் இடையேயான பொருளாதார மேம்பாடு, ராணுவ ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை வளர்ப்பதற்கான வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி பயன்படுத்தப்படும்.

அன்னியமுதலீடுகள்:'

ஆசியான்' அமைப்பில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நட்புநாடு மட்டுமின்றி, உலகளவில் அன்னிய முதலீடுகளில் முன்னணி நாடாகவும் சிங்கப்பூர் விளங்குவதாகவும். தொடர்ந்து செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் எனவு அவர் தெரிவித்தார்.பின்னர் பேசிய சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் சண்முகம்,தூதரக ரீதியில் எங்கள் நாட்டை முதல்முதலாக அங்கீகரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என பாராட்டினார்.

Comments