தயார் நிலையில் :
கடற்படை
தளபதி அட்மிரல் ஆர்.கே., தோவன் பேசுகையில் , நமது கடற்படை பல்வேறு
யுக்திகளுடன் சக்தி கொண்டது. ஐ.என்.எஸ்.,கோல்கட்டா கப்பல் நமது படைக்கு
கூடுதல் பலத்தை அளிக்கும் சக்தி கொண்டது. நமது படை எந்தவொரு சவாலையும்
எதிர்கொள்ளும் விதமாக தயார் நிலையில் இருக்கிறது.
பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லி பேசுகையில், இந்திய கடற்படையில் இது வரலாற்றில் முக்கியமான நாள், மாபெரும் போர்க்கப்பல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டிருப்பது நமக்கு மிகப் பெருமை தரும் விஷயம். இன்னும் பல்வேறு தளவாடங்களை தயாரிக்க மத்திய அரசு முனைப்புடன் உதவி செய்யும். இவ்வாறு ஜெட்லி பேசினார்.
பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லி பேசுகையில், இந்திய கடற்படையில் இது வரலாற்றில் முக்கியமான நாள், மாபெரும் போர்க்கப்பல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டிருப்பது நமக்கு மிகப் பெருமை தரும் விஷயம். இன்னும் பல்வேறு தளவாடங்களை தயாரிக்க மத்திய அரசு முனைப்புடன் உதவி செய்யும். இவ்வாறு ஜெட்லி பேசினார்.
வர்த்தகம் முன்னேற்றம்:
பிரதமர் மோடி பேசுகையில், ஐ.என்.எஸ்.,கோல்கட்டா மிகப்பெரிய போர்க்கப்பல் ஆகும். நமது ராணுவம் நமது நாட்டின் சுதந்திரத்தை காக்கும், ஐ.என்.எஸ்.,கோல்கட்டா தயாரிப்பு நமது நாட்டின் தொழில்நுட்ப சக்திக்கு ஒரு முன்மாதிரியாகும். இந்த போர்க்கப்பல் தயாரிப்பில் ஈடுபட்ட வல்லுனர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். நாம் போரிடுவதற்காக எதையும் உருவாக்கினோமா என்பதை தவிர நாம் அலர்ட்டாக இருக்கிறோம் என்பதற்கு இது ஒரு மாதிரி. கடலோர பாதுகாப்பு பேணிகாப்பதன் மூலம் வர்த்தகம் முன்னேற்றம் பெறுகிறது.
எனது தலைமையிலான அரசு பாதுகாப்பு துறை செலவினத்திற்கு முக்கியத்தும் அளிக்கிறது. பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நவீனம்ஆகும் போது நமது படையினர் அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கின்றனர். பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு முடிவு கட்டி, அவற்றை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
Comments