இன்று காலை அவை கூடியதும், தெலுங்கானா எம்.பி.,க்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்த அவையில் எம்.பி.,க்கள் தங்கள் தொகுதி பிரச்னைகளை எழுப்பினர். விருதுநகர் எம்.பி., ராதாகிருஷ்ணன் எழுந்து தமிழில் பேசினார். " சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் தொழில் கடுமையாக பாதிப்புக்குள்ளாகிறது. சீனாவில் இருந்த பட்டாசு பட்டாசு இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்த வேண்டும். சீனாவில் இருந்து கள்ளத்தனமாக , கடத்தப்பட்டு, துறைமுகம், மற்றும் நேபாளம் மூலம் இந்தியாவிற்குள் வருகிறது. இதனால் இந்திய வருமானம் பாதிக்கப்படும். இது தொடர்பாக மாண்புமிகு அம்மா, புரட்சித்தலைவி அவர்கள் பல முறை பிரதமருக்கு கடிதம் எழுதியும் கண்டுகொள்ளப்படவில்லை. உரிய நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் ?
சிவகாசியில் தொழில் பாதிக்கிறது. உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் சீன பட்டாசு தடை செய்ய வேண்டும். இது குறித்து அம்மா அனுப்பிய கடிதம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”. என்பதை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் இவ்வாறு தமிழில் பேசினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நானும் தமிழில் பதில் அளிக்கிறேன். பாரத பிரதமருக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், முதல்வர் அவர்கள்
அனுப்பிய கடிதம் கிடைச்சது. இதன் மீது உரிமையான , உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.
முதன் முறையாக தமிழில் பதில் : ஐகோர்ட்டில் , சுப்ரீம் கோர்ட்டில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என தொடர்ந்து குரல் எழுந்து வரும் வேளையில் , பார்லி.,யிலும் தமிழ் விவாதம் ஏன் நடந்தது . இது வரை அவையில் எந்தவொரு மத்திய அமைச்சரும் தமிழில் பதில் அளித்தது இல்லை. முதன் முறையாக நிர்மலா சீத்தாராமன் ( தமிழகத்தை சேர்ந்தவர்) தமிழில் பதில் அளித்து மகிழ்வை ஏற்படுத்தினார்.
Comments