ஆபாச படங்களாக வெளியிட்ட பூனம் பாண்டேவின் கணக்கை முடக்கிய ஃபேஸ்புக்

மும்பை: அரை நிர்வாண படங்களாக வெளியிட்டு வரும் நடிகை பூனம் பாண்டேவின் கணக்கை ஃபேஸ்புக் முடக்கி வைத்துள்ளது. மாடலாக இருந்து நடிகையானவர் பூனம் பாண்டே. விளம்பரம் தேடுவது என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்கும். அதனால் அவ்வப்போது அரை மற்றும் முக்கால் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவார் பூனம். இந்நிலையில் தான் ஃபேஸ்புக் பூனம் பாண்டேவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

வழக்கம் வழக்கமாக பயனீட்டாளர்கள் தான் தங்களின் ஃபேஸ்புக் கணக்கை டீஆக்டிவேட் அதாவது முடக்கி வைப்பார்கள். ஆனால் பூனம் விஷயத்தில் உல்டாவாக நடந்துள்ளது.

முடக்கம் பூனம் பாண்டேவின் ஃபேஸ்புக் கணக்கை ஃபேஸ்புக் நிர்வாகமே முடக்கி வைத்துவிட்டது.

பூனம் எனது ஃபேஸ்புக் பக்கம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் கவலை அடைந்துள்ளேன். என்னை 20 லட்சம் பேர் ஃபேஸ்புக்கில் லைக் செய்திருந்தனர். என் கணக்கை மீண்டும் எப்படி பெறுவது என்று கூறுங்கள் என்று பூனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

படம் ஃபேஸ்புக், ட்விட்டரில் பூனம் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது ஃபேஸ்புக்கில் படங்களை வெளியிட முடியாதே என்பது தான் பூனமின் கவலை.

Comments