புதுடில்லி:''ஈராக்கில், பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளவர்கள் உட்பட,
அனைத்து இந்தியர்களும், பத்திரமாக நாடு திரும்புவது உறுதி செய்யப்படும்,''
என, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
ஈராக்கின் மொசூல் நகரில், இந்தியர்கள், 41 பேர், பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி உள்ளனர்.
ஈராக்கின் மொசூல் நகரில், பயங்கரவாதிகள் பிடியில் உள்ள, 41 பேர் உட்பட, அனைத்து இந்தியர்களும், பாதுகாப்பாக நாடு திரும்புவதை, மத்திய அரசு உறுதி செய்யும். அதற்காக, சாத்தியமான அனைத்து வழிகளிலும், முயற்சி மேற்கொள்ளப்படும்.ஈராக்கில் உள்நாட்டுப் போர் துவங்கியது முதல், அங்குள்ள நிலவரங்களை, மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அத்துடன், ஈராக் செல்லும் இந்தியர்களுக்காக, அவ்வப்போது, எச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்படுகின்றன.
ஈராக் பயணத்தை தவிர்க்கும்படி, இந்தியர்கள் அனைவரையும், மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஈராக் செல்வோருக்கு, குடியேற்றத் துறை அனுமதி வழங்குவதையும், வெளிநாட்டு இந்தியர் விவகாரத் துறை நிறுத்தி வைத்துள்ளது.ஈராக்கில், இந்தியர்கள் இருந்தனர். அவர்களில், ஒரு பிரிவினர் மட்டுமே, சண்டை நடக்கும் பகுதியில் சிக்கி உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
Comments