டில்லியில், அசோசெம் சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ் பங்கேற்றார்.
மாற்றம் வேண்டும் : நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி முறை சொல்லிக் கொள்ளும் படியாக, சிறப்பானதாக இல்லை. முதற்கட்டமாக, ஆசிரியர்கள் மற்றும் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் கற்பிக்கும முறையில், மேம்படுத்தப் பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். நாட்டில், அறிவியல் மற்றும் கல்வி துறைகளுக்கு போதிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை. நாட்டின் எதிர்கால சந்ததியினரை, திறமை மிக்கவர்களாக உருவாக்குவதில், அறிவியல் மற்றும் கல்வி துறைகளுக்கு போதிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இதை மத்திய அரசு உணர்ந்து செயல்படும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
குற்றச்சாட்டு : நரசிம்மராவ், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது, கல்வி தொடர்பான தேசிய கொள்கைகளின் அடிப்படையில், அவருக்கு தான் கடிதம் எழுதினேன். அதில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பிரிவில், கல்வி துறைக்கு 6 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தேன். அப்போது அதை ஏற்றுக்கொண்ட நரசிம்ம ராவ், பிரதமர் ஆனவுடன், 2 சதவீதத்தை மட்டுமே, கல்விக்காக ஒதுக்கியது தனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. கல்விக்கு அதிக நிதி ஒதுக்குவதில், முன்னாள் பிரதமர் ராஜிவ் ஆர்வமாக இருந்ததாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவரின் ஆயுட்காலம் குறைந்தளவு இருந்ததாக விஞ்ஞானி ராவ் கூறினார்.
Comments