இந்தியாவிற்கு எதிரான தாக்குதலை அனுமதிக்க மாட்டோம் : இலங்கை

கொழும்பு: இந்தியாவிற்கு எதிரான தாக்குதலை அனுமதிப்பதில்லை என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிபர் ராஜபக்ஷே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் பெரி்ஸ் கூறியதாவது:
இந்தியாவிற்கு எதிரான தாக்குதலுக்கு இலங்கையை தலமாக பயன்படுத்த எந்த நாட்டவருக்கும் அனுமதி தரப்போவதில்லை என தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது தென் மாநிலங்களில் உள்ள அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டு தூதரகங்களை தகர்க்க போவதாக தெரிவித்தனர். மேலும் இதற்காக இலங்கையி்ல் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இலங்கை அரசு இலங்கையில் நீண்ட நாட்களாக தங்கியுள்ள பாகி்ஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியது. இந்நிலையி்ல் செய்தியாளர்களை சந்தித்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே இலங்கையில் இருக்கும் ஐ.நா., தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் அடைககலம் கேட்டிருப்பது குறித்து பாக்., அரசிடம் தெரிவிக்கப்படும் என கூறினார்.

பாகிஸ்தானில் தற்போது உள்நாட்டு கலவரம் உச்சநிலையை அடைந்திருப்பதையடுத்து, அந்நாட்டிற்கான தனது சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்துள்ளார் ராஜபக்ஷே.

Comments