ஆற்றில் படகு கவிழ்ந்தது: 200 பேர் மாயம்

டாக்கா: வங்கதேசத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் அதில் பயணம் செய்த 200 ஆற்றில் முழ்கி மாயமாகினர். வங்கதேச நாட்டில் தெற்கு டாக்காவில் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஆற்றில் 200-க்கும் மேற்பட்டோர் படகில் சென்றனர். இப்பகுதியில் பெய்து வரும் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆற்றில் சென்ற படகு திடீரென கவிழ்ந்து முழ்கியது. அதில் பயணம் செய்த 200 பேரின் நிலைமை என்ன ஆனது என தெரியவில்லை மீட்புபணிகள் நடக்கின்றன.

Comments