அஞ்சான் படப்பிடிப்பில் கலந்து
கொண்ட இரண்டே நாட்களில் இந்த பிரச்னை விஸ்வரூபமெடுத்ததால், உடனடியாக
படப்பிடிப்பில் இருந்து வெளியேறி சிகிச்சை பெற்றார் சமந்தா. அப்போது,
படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன லைட்கள்தான் மீண்டும்
தோல் அலர்ஜி ஏற்பட்டதற்கு காரணம் என்று மருத்துவர்கள் சொன்னதையடுத்து,
சமந்தா சம்பந்தப்பட்ட சீன்களுக்கு பவர்புல் லைட்களை யூஸ் பண்ணுவதை
குறைத்துக்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில்,
தோல் சிகிச்சையை இப்போது இன்னும் தீவிரப்படுத்தியுள்ள சமந்தா, ஒரு
ஹாலிவுட் நடிகை கொடுத்த ஆலோசனைப்படி தற்போது லண்டனில் உள்ள ஒரு
மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று வருகிறார். அதனால், மாதம் ஒரு முறையேனும்
அங்கு சென்று வரும் சமந்தா, அதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து
கொண்டிருக்கிறார்.
Comments