சென்னை: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதை தடுக்க வேண்டும் என
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில்
மீனவர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையால் கைது
செய்யப்பட்ட 25 தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும்.
மீனவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டும் என
கூறியுள்ளார்.
Comments