புதுடில்லி: பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி குறித்து,
திரும்பத்திரும்ப கேள்விகள் கேட்ட, பத்திரிகை நிருபரை, துவாரகா பீடத்
தலைவர், சுவாமி சொரூபானந்தா, கன்னத்தில் அறைந்தார்.
நாட்டின், நான்கு முக்கிய பீடங்களில் ஒன்றான, வட மாநிலங்களில் செல்வாக்கு மிக்க, துவாரகா பீடத்தின் தலைமை குருவாக இருப்பவர், சுவாமி சொரூபானந்த சரஸ்வதி.
இது குறித்து, சொரூபானந்த சுவாமி கூறுகையில், ""மோடி பற்றி, திரும்பத்திரும்ப கேள்வி கேட்டதால், கோபத்தில் நான் அடித்து விட்டேன்,'' என்றார். அமைதியின் உருவமாக செயல்பட வேண்டிய சாமியார், கோபத்தில், நிருபரை தாக்கிய காட்சிகள், அங்குள்ள, "டிவி'களில் வெளி யாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments