அழகிரி சஸ்பெண்டால் தி.மு.க.,வின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாது: கருணாநிதி

சென்னை: சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, தி.மு.க.,விலிருந்து அழகிரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், தி.மு.க.,வின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாது என கூறினார். மேலும் அவர், தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவி அழகிரிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. அப்பதவி வேறு யாருக்கும் கொடுக்கப்படாது. வரும் பார்லிமென்ட் தேர்தலில் தி.மு.க.,வுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தே.மு.,தி.க.,விடமிருந்து பதில் வராததற்கு நான் பொறுப்பல்ல எனவும் கூறினார்.

Comments