திருநெல்வேலி: பார்லி.,தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் குறைந்தபட்சம்
ம.தி.மு.க., சார்பில் ஏழு எம்.பி.,க்கள் வெற்றி பெறுவது உறுதி என கட்சியின்
பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ,
ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று தமது சொந்த ஊரான நெல்லை மாவட்டம்
கலிங்கப்பட்டியில் பொதுமக்களை சந்திப்பது வழக்கம். இன்று காலையில் அனைத்து
சமுதாய தெருக்களிலும் நடந்துசென்று பொதுமக்களை சந்தித்தார். வைகோ
பேசுகையில், 'விரைவில் பார்லிமென்ட் தேர்தல் வருகிறது.
பாரதிய ஜனதா
கூட்டணியில் போட்டியிடுகிறோம். போட்டியிடுவது எத்தனை தொகுதி என்பது
இன்னமும் முடிவாகவில்லை. இருப்பினும் மதிமுகவில் இருந்து குறைந்த பட்சம்
ஏழு எம்.பி.,க்கள் வெற்றிபெற்று பார்லிமென்ட் செல்வது உறுதி,' என்றார்.
Comments