டில்லி மாநில அரசில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்,
ஊழியர்களை கண்டுபிடிக்க, பொதுமக்களுக்கான, அவசர உதவி தொலைபேசி எண்களை,
முதல்வர், கெஜ்ரிவால் நேற்று முன்தினம் வெளியிட்டார். காலையில், 8:00 மணி
முதல், இரவு, 10:00 மணி வரை செயல்படும் என்றும், அறிவித்தார்.
இந்த,
'ஹெல்ப்லைனுக்கு' தொடர்பு கொண்டு, லஞ்சம் வாங்குபவர்கள் குறித்த தகவல்
சொன்னால், பாதிக்கப்பட்டவரே, புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, லஞ்சம்
கேட்டவரை, ஆதாரத்துடன் சிக்க வைக்க வழி வகுக்கப்படும் என, கெஜ்ரிவால்
குறிப்பிட்டு இருந்தார். இந்த அவசர உதவி தொலைபேசி எண்கள், நேற்று முதல்
செயல்பாட்டுக்கு வந்தன. இது துவக்கிய, ஏழு மணி நேரத்தில், 4,000 அழைப்பு
கள் வந்ததாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து அழைப்புகள்
வருவதால், 'ஹெல்ப்லைனில்' பணியாற்றும் ஊழியர்களால், சமாளிக்க முடியாமல்
சிரமப்படுகின்றனர். இதை அறிந்த, முதல்வர் கெஜ்ரிவால், ஊழியர்கள்
எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த உத்தரவிட்டுள்ளார். வரும் அழைப்புகளில்,
புகாரில் நியாயம் இருக்கும் பட்சத்தில், அதை, 15 வல்லுனர்கள் அடங்கிய
குழுவுக்கு அனுப்பப் படுகிறது. அவர்கள், அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க
பரிந்துரை செய்கின்றனர். ஹெல்ப் லைனுக்கு பேசும் அனைவரும், 'ஊழலை
கண்டுபிடிக்க,'ஸ்டிங்' ஆபரேஷன் நடத்துக்கள்' என வலியுறுத்தி கூறுகின்றனர்.
ஹெல்ப்லைன் எண்ணை, பொதுமக்கள் எளிதில் ஞாபகம் வைத்து கொள்ளும் வகையில்,
நான்கு இலக்க எண்ணாக மாற்றப்படுகிறது.
Comments