ஆம் ஆத்மி வீடியோ எதிரொலி: டெல்லி போலீஸ் 3 பேர் சஸ்பென்ட்

டெல்லி: டெல்லியில் இளைஞரை தாக்கிய 3 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நிராயுதபாணியாக இருந்த 3 போலீஸ் தாக்கியது இணையத்தளத்தில் அம்பலமானது.
ஜனவரி 12-ல் நடந்த தாக்குதல் பற்றிய வீடியோ பதிவை ஆம் ஆத்மி கட்சி இணையத்தில் வெளியிட்டது. வீடியோ பதிவு வெளியானதை அடுத்து 3 போலீசார் மீது காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.டெல்லி செங்கோட்டை அருகே இளைஞர் மீது காவலர்கள் 3 பேர் தாக்குதல் நடத்தினர்.

Comments