சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்
தோல்வியை சந்தித்தது. பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பிரசாரம் நாடு
முழுவதும் பெரும் ஆதரவலையை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் தோல்விக்கு
காங்கிரஸ் கட்சி சுய பரிசோதனை செய்து கொள்ளும் என்று கட்சி தலைவர் சோனியா
மற்றும் ராகுல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை
அமைச்சர் ஜெயந்தி நடராஜன் இன்று தனது பதவியில் இருந்து விலகுவதாக ராஜினாமா
கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். இவரது ராஜினாமாவை ஜனாதிபதி
அலுவலகம் ஏற்று கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இலாக்காவை
பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூடுதலாக கவனிப்பார் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியில் இருந்து விலகிய ஜெயந்தி நடராஜன் வரவிருக்கும் லோக்சபா தேர்தல்
பணிகள் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரித்தல் ஆகியவற்றை கவனிப்பார். என்றும்
கூறப்படுகிறது.
ஜெயந்தி நடராஜனை பொறுத்தவரையில்
இவர் தமிழகத்தில் இருந்து 3 முறை ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு
செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக மத்திய அமைச்சர்
பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.
அடுத்த பட்டியல் தயார் :
Comments